----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Showing posts with label பிரதான செய்திகள். Show all posts
Showing posts with label பிரதான செய்திகள். Show all posts

Friday, September 29, 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான நான்கு விமானங்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு மணிக்கணக்கில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் லாகூர் நோக்கிப் புறப்படவிருந்த UL 153 என்ற விமானம் தாமதமானதால், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீண்டும் வீட்டிற்கு செல்ல நேரிட்டது. விமான சேவைகள் தாமதம் அதன்பின், இந்தியாவின் சென்னை மற்றும் பங்களாதேஷ் டாக்கா செல்லும் விமானங்கள் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். விமான நிலையம் வந்தடைந்ததும், சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட வேண்டிய யுஎல் 308 என்ற விமானம் சுமார் ஐந்து மணி நேரம் தாமதமாக புறப்படும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் சிங்கப்பூர் வந்த பயணிகள் உணவு பெறுவதற்காக டோக்கன் வழங்கப்பட்ட போதும் உணவு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அத்துடன், கடமையில் இருந்த உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் விசாரிக்க வருகைத்தராமையினாலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசர தொலைபேசி இலக்கமான 011-7771979 என்ற தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காமையினாலும் பயணிகள் மேலும் சிரமப்பட்டனர். இதேவேளை, நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையால், வணிக வகுப்பு பயணிகள் சிலர், இந்தோனேசியாவின் ஜகார்த்தா வழியாக சிங்கப்பூருக்கு மற்றொரு விமானத்தில் செல்ல நேரிட்டது.
Share:

Thursday, September 28, 2023

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்

 கிளிநொச்சியில் நேற்று(27) வெளிநாட்டு பிரஜையின் வீட்டிற்குள் நுழைந்த குழுவொன்று நடத்திய தாக்குதலில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் நேற்று(27) நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை இந்த குழுவினர் தாக்கிய போது சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டிலுள்ள ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக கூறி அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல்

இந்நிலையில், குறித்த குழுவினர் இளைஞனின் கால் பகுதியில் வெட்டியதாகவும், இதனைத் தடுத்த பெண்ணையும் தாக்கியதாகவும் காவலதுறையினருக்க அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் | Terror In Kilinochchi Attack At Midnight Into Home

இதேவேளை தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 20இற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து அவ்வீட்டில் இருந்த முதியவர்களான கணவன், மனைவி இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோல் குண்டு வீசப்பட்டது

அத்துடன் வீட்டில் இருந்த சிசிரீவி , மின்விளக்குகள், பிரதான வாயில் என்பவற்றை தாக்கி சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கிய பின் அதனை எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் | Terror In Kilinochchi Attack At Midnight Into Home

இதேவேளை தாக்குதலின் போது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தாக்குதல் குழுவைச் சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களுக்க முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சந்தேகம் 

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் | Terror In Kilinochchi Attack At Midnight Into Home

இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர்களில் பலர் கடந்த காலங்களில் வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இரணைமடு குளத்தின் கீழ் இடம்பெறுகின்ற சட்டவிரோத மண்ணகழ்வைத் தடுப்பதற்கு குறித்த குடும்பம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவில் மண் மாபியாக்களே அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது குறித்த மணல் அகழ்வு முற்றாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவமானது பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Share:

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி 10.7 கோடிக்கு விற்பனை!

 ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சார்பியல் கொள்கை, பொது சார்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் ரூ.10.7 கோடிக்கு (இந்திய மதிப்பு) விற்பனையாகியுள்ளது.

அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சார்பியல் கொள்கையை 1905 ஆம் ஆண்டிலும், பொது சார்பியல் கொள்கையை 1915 ஆம் ஆண்டிலும் ஐன்ஸ்டீன் வெளியிட்டார்.இவற்றைக் குறித்து ஜெர்மன் மொழியில் விளக்கமளித்து அவர் எழுதிய கட்டுரைகள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த 1929 ஆண்டு பெப்ரவரி 3 இல் வெளியானது.

ஏல விற்பனையில் 10.7 கோடி

தற்போது, அந்தப் பிரதியானது சீனாவின் ஷாங்காய் நகரத்தில் செப் 28 இல் கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையில், ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி 10.7 கோடிக்கு விற்பனை! | Albert Einstein Manuscript Sold At Auction 7 Crore

மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரதியில் சார்பியல் கொள்கையின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகளுடன் தொடர்புடைய இரு சமன்பாடுகள், காலம் இடம் தொடர்பு குறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Share:

Wednesday, September 27, 2023

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சமாகியது..

 

நாட்டுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நேற்று (26) ரஷ்ய பிரஜை மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகையுடன் பத்து இலட்சமாக அதிகரித்தது.

ரஷ்ய பிரஜை ஒருவரும் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்கும் முகமாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கைக்கு வந்த ரஷ்ய நாட்டவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். ரஷ்யாவிலிருந்து ஓமானுக்கு வந்த அவர்கள், பின்னர் ஓமான் தலைநகர் மஸ்கட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கேக் வெட்டி, மாலை அணிவித்து அவர்களை வரவேற்றனர்.

Share:

2023: இதுவரை 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 46 பேர் பலி

 

ஆறு வயது சிறுமியும் உள்ளடக்கம்; பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

இவ்வருடத்தின் (2023) இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 06 வயது சிறுமி உட்பட 46 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம்,தென் மாகாணத்திலேயே அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இச்சம்பவங்களில் 35 பேர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது

Share:

Thursday, September 7, 2023

நிந்தவூரின் வரலாற்றில் முதல் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவான ஜனுசிகாவுக்கு கௌரவம்

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் குணசேகரம் ஜனுசிகாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 2023.09.06 இடம்பெற்றது நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரீ.கலையரசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் கௌரவ அதிதிகளாக நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் சரிபுத்தீன், நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ அப்துல் கபூர், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, ஆகியோர் கலந்து கொண்டனர் நிந்தவூரின் வரலாற்றில் முதல் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற திறமையை தனதாக்கி கொண்டுள்ள ஜனுஷிகாவை பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ரீ. கலையரசன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் இதன் போது கருத்து தெரிவிக்கையில் வைத்தியத்துறைக்கு தெரிவான மாணவி ஜனுஷிகா, தான் சிறு வயது முதல் ஓர் சிறுபிள்ளை வைத்திய நிபுணராக வரவேண்டும் என்பது தனது இலட்சியம் என்றும், அதனை எதிர்காலம் நிச்சயம் கட்டியம் கூறி நிற்பதாகவும் தெரிவித்தார் அத்துடன் தான் ஒரு வைத்திய நிபுணராக வெளிவந்ததும் ஏழை எளிய மக்களுக்கு நிச்சயம் இலவசமாகவே தன்னுடைய சிகிச்சை அளிப்புக்கள் இடம்பெறும் எனவும் உறுதியளித்தார் இந்த மாணவி கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அது விசேடசித்தி 09 A பெற்றமைக்காக அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் பரிசில் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Share:

Monday, September 4, 2023

நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை!!!

பாறுக் ஷிஹான் நீதிமன்றத்தின் சட்டவாட்சியினையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் கேள்விக்குட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளமையினை தாம் அவதானித்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (3) இடம்பெற்ற போது, அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நீதிமன்றங்களும், சட்டத்துறைகளும் சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் சட்டவாட்சியினையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் சவாலுக்கு உட்படுத்தும் நிலையினை அவதானிக்க முடிகிறது.எனவே இது தொடர்பில் நீதிபதிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல் உங்கள் முன்னாள் நடக்குமென்றால், நீதிபதிகளே அந்த வழக்கை எடுத்து விசாரித்து, அவமதிப்பைச் செய்தவருக்கு தண்டனை வழங்க முடியுமென்று லோட் டெனிங் (Lord Denning) எழுதிய ‘சட்டத்தின் ஒழுக்கம்’ (The Discipline of Law) எனும் நூலில் குறிப்பிடுகின்றார். நீதிமன்ற அவமதிப்பு என்பது நீதிபதிகளை அவமதிக்கவில்லை. அது நீதிமன்ற ஆட்சியினையும், அதிகாரத்தினையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு என்பதை நீதிபதிகள் தனிப்பட்ட விடயமாக எடுக்கத் தேவையில்லை” என்றார். இதன் போது ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் எழுதிய ‘Law of Actions’ என்ற நூலின் அறிமுகமும் இடம்பெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ. றௌசுல் ஹாதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், தொழில் நியாய சபை நீதிபதிகள், சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள், இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Share:

Friday, September 1, 2023

இலங்கைக்கான இந்திய மானிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு!!!

இலங்கை முழுவதும் செயற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மானிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்திய அரசு அதிகரித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதார நிலப்பரப்பில் விரைவான மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா-இலங்கை உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் (HICDP) கட்டமைப்பின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் 9 தற்போதைய திட்டங்களின் விடயத்தில் நிதி ஒதுக்கீடு 50% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 9 திட்டங்களுக்கான ஒட்டுமொத்த நிதி அர்ப்பணிப்பு அதிகரிப்புக்குப் பிறகு தற்போது கிட்டத்தட்ட 3 பில்லியன் ரூபாவாக உள்ளது. இந்தத் திட்டங்கள் கல்வி மற்றும் சுகாதாரம் முதல் விவசாயம் வரையிலான துறைகளில் வெட்டப்படுகின்றன. இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய HICDP கட்டமைப்பின் கீழ் இந்திய அரசாங்கம் 60க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்களை நிறைவு செய்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும், 20 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. HICDP கட்டமைப்பு 2005 இல் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது, பின்னர் ஒவ்வொரு முறையும் ஐந்தாண்டு காலத்திற்கு மூன்று முறை புதுப்பிக்கப்பட்டது. ஜனவரி 2023 இல் கட்டமைப்பின் கீழ் தனிப்பட்ட திட்டங்களுக்கான உச்சவரம்புகள் மற்றும் ஒட்டுமொத்த நிதி மூலதனச் செலவினத்தையும் இரட்டிப்பாக்கியது இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி ஒத்துழைப்பு கூட்டாண்மை போர்ட்ஃபோலியோ சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும், இதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாக உள்ளது.
Share:

கொழும்பு துறைமுகத்தில் இந்திய யுத்த கப்பல் : மாணவர்கள் பார்வையிட சந்தர்ப்பம்!!!

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi எனும் யுத்த கப்பல் இன்று (01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீற்றர் நீளமுடையது. கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், INS Delhi கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும். இதன்போது, மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் பயிற்சி நடவடிக்கைகளிலும் குறித்த கப்பல் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

மட்டு. புதூரில் வீடு ஒன்றில் திருட முற்பட்ட பக்கத்து வீட்டுக்காரர் மரத்தில் இருந்து வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதி !!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூரில் திருடன் ஒருவன் அவனது பக்கத்து வீட்டில் திருட முற்பட்ட வேளை மரத்தில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். வியாழக்கிழமை (31) மாலை திருடன் வீட்டின் கூரையை உடைத்து திருடமுற்பட்ட வேளை, திருடனை கண்டு வீட்டில் உள்ளவர்கள் சத்தமிட்டுள்ளனர். இந்நிலையில், திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக கூரையில் இருந்து அருகிலுள்ள மரத்தில் பாய்ந்து ஏறி ஒழித்துக் கொண்டான். திருடனை பிடிப்பதற்காக அயலவர்கள் ஒன்றிணைந்ததையடுத்து திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக முயற்சித்தபோது கீழே வீழ்ந்து கால் இரண்டாக உடைந்துள்ளது. இதனையடுத்து, அயலவர்கள் திருடனை பிடித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Share:

பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு!!!

நாளை (02) முதல் பஸ் கட்டணங்களை 4 வீதத்தால் அதிகரிப்பதற்கு பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைக் கட்டணங்களும் இன்று முதல் 5 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை மாவட்ட பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Share:

24 மணிநேர சேவையாக மாற்றப்படும் யாழ் பேருந்து நிலையம்!!!

வட பகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் இன்றுமுதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்ட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடந்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடற்றொலில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் 24 மணிநேர சேவையை ஏற்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு கோரிக்கைக்கு முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரது கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றதன் அடடிப்டையில் குறித்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனடிப்படையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் இன்று முதல் (01) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் புதிய மைல் கல்லில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று முதல் ஆரம்பம் 24 மணிநேர சேவையாக மாற்றப்படும் யாழ் பேருந்து நிலையம்! | 24 Hours Transport Service Jaffna Bus Station இதனிடையே கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை யாழ் மாவட்டத்தில் இருந்து மையப்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை தமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் காலாகாலமாக பகல் வேளைகளிலும் இரவில் ஆகக் கூடுதலாக 10 மணிவரையிலான காலப்பகுதிக்கான அட்டவணை நிரலின் அடிப்படையில் தமது சேவையை மேற்கொண்டு வந்த யாழ் மத்திய பேருந்து நிலையம் இன்றுமுதல் தனது சேவையை 24 மணிநேரமும் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக நேரக் கணிப்பாளர்கள் மற்றும் ஆளணிகள் குறித்த சேவைக்காக நியமிக்கப்பட்டு இன்று 01.09.2023 ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தூர இடங்களில் இருந்து வரும் பயணிகள் இதுவரை காலமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் அதற்கான தீர்வு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதுடன் தமது பயணங்களை இலகுவாகவும் தடைகளின்றியும் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 20 நாட்களுக்கு மூடப்படுகிறது!!!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பராமரிப்பு பணிகளுக்காக செப்டெம்பர் 18 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க இன்று தெரிவித்தார். தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதுமான அளவு எரிபொருளை இறக்குமதி செய்ய ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்
Share:

மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷுக்கு இலங்கை திருப்பி செலுத்தியது!!!

இலங்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர்களில் மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்தியுள்ளது
Share:

மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்!!!

மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு நபர்களால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் மாளிகாவத்தையில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் இடத்தில் நின்றிருந்த போது, துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Share:

இன்று முதல் கியூ ஆர் முறைமை நீக்கம்..! சற்றுமுன்னர் அமைச்சர் வெளியிட்ட தகவல்!!!

கியூ ஆர் அடிப்படையிலான எரிபொருளை செலுத்தும் முறை இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறிவித்துள்ளார். மக்கள் இன்று முதல் கியூ ஆர் குறியீட்டை உருவாக்காமல் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கியூ ஆர் முறைமை இன்று முதல் கியூ ஆர் முறைமை நீக்கம்..! சற்றுமுன்னர் அமைச்சர் வெளியிட்ட தகவல் | Petrol Price Qr System Remove In Sri Lanka கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் அதிகம் நிலவியிருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த கியூ ஆர் முறைமை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share:

பதவியில் இருந்து நீக்க கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சி – தயாசிறி குற்றச்சாட்டு!!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கு கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர், அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தம்மை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சிலர் நீக்குவதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் தற்போதே அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கட்சியின் தலைவர் மற்றும் நிறைவேற்று குழு, தாம் பொதுச்செயலாளர் பதவிக்கு பொறுத்தம் இல்லை என்ற தீர்மானத்தை எடுத்தால் உடனடியாக அந்த பதவியில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகரவின் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
Share:

இராணுவத்தினருக்கு உரித்தான பொருட்களுடன் தெமட்டகொடை மேம்மபாலத்துக்கு அருகில் இருவர் கைது!!!

இராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் அதிகாரிகளால் நேற்று முன்தினம் புதன்கிழமை (30) தெமட்டகொட மேம்பாலத்துக்கு அருகில் உள்ள விசேட வீதித் தடையில் வைத்து இராணுவ உடைகள் மற்றும் உபகரணங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹரகமவைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டியை வீதித்தடையில் நிறுத்தி சோதனையிட்டபோது, இராணுவத்தினருக்கு சொந்தமான ஜங்கிள் கெப், ஆவாக்கி டோக்கிகள், பெற்றரிகள் மற்றும் அதன் 2 சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டன.
Share:

பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்!!!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் போக்குவரத்து துறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதித் தீர்மானத்திற்காக போக்குவரத்து அமைச்சரிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
Share:

இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி!!!

நேற்றுடன்(31) ஒப்பிடுகையில் இன்று(01) தங்கத்தின் விலை 1,900 ரூபா குறைவடைந்துள்ளது. நேற்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 162,900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1,900 ரூபா குறைவடைந்து 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று தங்கம் விலை விபரம்,
Share:

About