Column Left

Vettri

Breaking News

ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரப்பகுதியில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு




ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரப்பகுதியில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சின் 2.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரப்பகுதியில் எமது முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததோடு, ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், ஆலயடிவேம்பு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஆர். ரதீசன், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலயடிவேம்பு பிரதேச பிரஜாசக்தி தவிசாளர்கள் உட்பட பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments