அம்பாறை மாவட்ட புலமைப் பரிசில் முதனிலை மாணவனாக புதுநகர் கனீஸ் !
குவியும் பாராட்டுகள்
(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறைவலயத்தின் அதிகஸ்ர பிரதேச பாடசாலையான கமு/மல்வத்தை புதுநகர் அ.த.க பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ் வலயத்தின் அதி கூடிய 180புள்ளிகளைப்பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.
இதுவே அம்பாறை மாவட்டத்தின் அதிகூடிய புள்ளி சாதனை என்று குறிப்பிடுகிறது.
புதுநகர் பாடசாலையில் இம்முறை 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100%(வீதம்) ஏனைய மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
மாவட்ட சாதனை மாணவன் பிரகலதன் கனீஸ்- 180
எஸ்.லிதுன்- 156
எஸ்.ஜிதுமிக்கா- 153
வை.கிருஸ்காந்- 149
வி.கரிஸ்சாகன்- 148
ஆர்.டிதேர்ஸா- 145
ஜேமதுக்சன்- 135
ரி.டோவர்சனன்- 132 ஆகியோர் சித்தி பெற்றிருப்பதாக அதிபர் ரி.ஜெயசிங்கம் தெரிவித்தார்.
மாவட்ட சாதனை மாணவன் பிரகலதன் கனீஸ் சந்திப்பு நிகழ்வில் அதிபர் ஜெயசிங்கம் ,
கற்பித்த ஆசிரியை திருமதி இராமச்சந்திரன், மாணவனின் தாய் திருமதி வனிதா பிரகலதன்,பிரதி அதிபர் கிருஷ்ணமோகன் ஆகியோரும் அத்தருணத்தில் பங்கேற்றனர்.
இவர்களை அதிபர்ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
No comments