பாடசாலை கல்வி திட்டத்தில் மனித உரிமை கல்வியினை உட்புகுத்த வேண்டும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் தையமுத்து தனராஜ்
பாடசாலை கல்வி திட்டத்தில் மனித உரிமை கல்வியினை உட்புகுத்த வேண்டும்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் தையமுத்து தனராஜ்
( வி.ரி.சகாதேவராஜா)
பாடசாலை மாணவர்களின் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து மனித உரிமை கல்வியினை உட்புகுத்த வேண்டும்.எதிர்காலத்தில் இத்திட்டத்தை மேற்கொள்ள மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் தையமுத்து தனராஜ் கல்முனையில் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய மற்றும் ஆணையாளர் பணிப்பாளர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதிக்கு அண்மையில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த போது அங்கு பேசிய தவிசாளர் தனராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு சிவில் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
அவர் தனது கருத்தில் மேலும் குறிப்பிட்டதாவது
மனித உரிமைகள் என்பது 30 உறுப்புரைகளை கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் அந்த ஒவ்வொரு உரிமைகள் விடயத்திலும் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். என்றார்.
அங்கு வலிந்து காணாமல் போன உறவினர்கள் கலந்து கொண்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இக்குடும்ப உறுப்பினர்கள் எதிர்நோக்குகின்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் சட்ட ரீதியாகவுள்ள உரிமைகள் பற்றியும் இதனை பிரயோகிக்கின்ற போது ஏற்படுகின்ற சவால்கள் பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் பற்றியும் அதனால் பொதுமக்கள் எதிர்நோக்கும் நிர்வாகக் குறைபாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேற்படி மக்களின் கோரிக்கைகளை ஆணைக்குழு உரிய கவனமெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமால் ஜி புஞ்சிஹேவா தனது கருத்தில் தெரிவித்ததாவது
சிவில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஆணைக்குழுவானது தீர்த்து வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சிவில் மக்களை பலப்படுத்துகின்ற செயற்பாட்டில் ஆணைக்குழு ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பாக பொலிஸார் அரச நிறைவேற்று உத்தியோகத்தர்கள் ஆகியோர் மனித உரிமைகளை மீறுகின்ற போது உடனடியாக அது தொடர்பில் அறிவிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
No comments