பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய கழிப்பறைக்குள் போதைப்பொருள் மீட்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறைக்குள் இருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கழிப்பறைக்குள் சந்தேகத்திற்கிடமான பல பார்சல்கள் இருப்பதை அவதானித்த துப்புரவுப் பணியாளர்,
அதனை விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.
இந்த சோதனையின் போது 422 கிராம் குஷ் கஞ்சா மற்றும் 1.262 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பின்னர், விமான நிலைய போலீசார் போதைப்பொருள்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, இந்த போதைப்பொருட்களை கடத்த முயற்சித்தவர்களை கண்டறிய விசாரணைகளை தீவிரமாக நடத்தி வருகிறது.
No comments