நாட்டின் சில இடங்களில் வேகமாக காற்று வீசக்கூடும்
மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும், மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,
திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்தில் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும்.
அந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ-க்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி காணப்படும்.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழைகள் மற்றும் அதிகமாக வீசக்கூடிய காற்று, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
No comments