Vettri

Breaking News

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக யார் வரவேண்டும்? மும்பை வங்கிக்கொள்ளை மைய விளக்கம்!




 இன்று இலங்கையில் மற்றுமொரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறுகிறது.


அரசியல் என்பது சமூக சேவை, மக்கள் நலன் பேணல் என்று இந்நாட்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் போஸ்ட் போட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.

அரசியலுக்கு படித்தவர் வர வேண்டும் என்று ஒரு சாரார் புலம்புகின்றனர்.

இன்னும் சிலர் பணம் படைத்தவன் போட்டியிட வேண்டும் என்று சொல்கின்றனர்.

இவற்றை கடந்து ஊழலற்றவன் தேர்தலுக்கு வர வேண்டும் என்று ஊழலுக்கு எதிரானவர்கள் சத்தம் போடுகின்றனர்.

இவர்கள் எவரும் சரிவராது நேர்மையானவர்கள் அரசியலுக்குள் அழைத்து வரப்பட வேண்டும் என்று சிலர் அமைதியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளும், முக்கியஸ்தர்களும் சில தகைமைகளை தீர்மானம் செய்துள்ளனர். 
அந்த தகைமைகளைக் கொண்டவர்களே வேட்பாளர்கள். அவர்கள் குறித்த அரசியல் கட்சியில் இன்று இணைந்து கொண்டாலும் சரியே..

உண்மையில் சேவை செய்ய வரும் உறுப்பினர்களை மக்கள் தாமாக முன்வந்து தேர்ந்தெடுக்க வேண்டும் .

அதை விடுத்து சேவை செய்ய வருபவர் தானே  போஸ்டர் அடிச்சு அரிசி சாராயம் பணம் கொடுத்து வீடு வீடாகச் சென்று அல்லது மேடை பிரச்சாரம் செய்து வாக்கு பெற வேண்டிய அவசியமில்லை .
உண்மையில் சேவை செய்ய வருபவர் ஏன் இப்படி கஷ்டப்பட்டு வர வேண்டும்?

வெளிநாடுகள் போல் அவர்களை விரும்பினால் மக்கள் வாக்களித்து அவரை உறுப்பினராக வர வைக்க முடியும் .
அந்த கலாச்சாரம் இங்கும் வர வேண்டும் .

ஆனால் அண்மைக்காலமாக கோடிக்கணக்கில் காசைச் செலவழித்து இறுதி நேரத்தில் வாக்குகளைப் பெறலாம் என்ற மனநிலை நிலவுகிறது.
அது களையப்பட வேண்டும்.

இன்றைய உலக அரசியல் என்றாலும், இலங்கை அரசியல் என்றாலும் நாம் நினைப்பதை விடவும் மாறுபாடு கொண்டதாக அரசியல் மாறி உள்ளது. அதனால் போஸ்டுகளில் உள்ள சொல்லாடல்கள் போலியானவை. தேர்தலின் பின்னர் அவர்களின் நடத்தைகளே உண்மையானவை.

ஆதலால் அரசியல் என்பதற்கு இந்தியாவில் நடைபெற்ற வங்கி கொள்ளை ஒன்று பலராலும் உதாரணமாக முன் வைக்கப்படுகிறது. இது கோட்பாடு அல்ல. யதார்த்தம். 

மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது நடந்த சம்பவங்கள்.*....

வங்கிக்குள் வந்த கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்.

இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால், உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால், யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்! அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். வங்கியில் இருந்தவர்கள் படுத்துவிட்டார்கள் .

மனதைமாற்றும்முறைஎன்பது இதுதான்
*". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*

அங்கே ஒரு பெண், கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன், இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அவளை அமர வைத்தான்..

இதைத்தான்செய்யும்தொழில்களில் கவனம்தேவைஎன்றுசொல்கிறோம்.
"Being Professional & Focus only on what you are trained""*

கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான், வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று .

மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம்.  பணம் நிறைய இருக்கிறது. நேரம் அதிகம் செலவாகும். அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.

இதைத்தான்படிப்பைவிட ஆனுபவம் சிறந்ததுஎன்போம்!
*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*

கொள்ளை நடந்த போதே, வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது, அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்.

"வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக 50 கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்.

இதைத்தான்காற்றுள்ளபோதேதூற்றிக் கொள்என்பது.
*This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*

இதை கேட்ட மற்றொரு அதிகாரி, வருடம் ஒரு கொள்ளை, இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் என்றார் .

இதைத்தான்சுயநலம்
சுயநலமானஉலகம்என்றுசொல்வது
*This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*

மறுநாள் செய்திகளில், வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி. அவர் பங்கு 50 கோடி!

கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து பணத்தை எண்ணத் தொடங்கினர்.

எவ்வளவு எண்ணியும், அவா்களால் 20 கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை.

கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து, " நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.

ஆனால் இந்த வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், 80 கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது என்றான்.

இதற்குத்தான்படித்திருக்கவேண்டும்
என்றான்.
*True. Knowledge is nowadays very important than money in this world.*

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர் 


No comments