நாளை காரையடி பிள்ளையாருக்கு மகா கும்பாபிஷேகம்!!
காரைதீவு நிருபர் சகா
கிழக்கிலங்கை காரைதீவு காரையடி அம்பாரை பிள்ளையார் ஆலய புனராவத்தன அஷ்ட பந்தன ஏக குண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்திவிழா நாளை(2) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
அதனையொட்டிய எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நேற்றும், இன்றும் நடைபெற்றது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கிரியைகளை நடாத்தி வருகின்றனர்.
No comments