சுவாமி ஜீவனானந்தர் பாலர் விளையாட்டரங்கு திறந்து வைப்பு
( வி.ரி சகாதேவராஜா)
மட்டக்களப்பு விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தர் பாலர் பாடசாலையில் சுவாமி ஜீவானந்தர் ஞாபகார்த்த பாலர் விளையாட்டரங்கு இன்று (5) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .
இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்சராத்மானந்தா ஜீ மகராஜ் அதனை திறந்து வைத்தார் .
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ சுவாமி உமாதீசானந்தா ஜீ ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
No comments