ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் இன்று (17)நீண்ட வரிசையில் காத்திருந்ததை இன்று அவதானிக்க முடிந்தது.
இது கடந்த கால எரிபொருள் தட்டுப்பாட்டு வரிசையினை ஞாபகம் ஊட்டியது.
உலக நாடுகளில் போர் பதற்றம் உருவாகிவரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகலாம் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் இந்நிலை உருவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகனங்களையே அதிகமாக பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காணப்பட்டது.
இதேநேரம் டீசலை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் காத்திருந்தன.
இதேநேரம் அரச உத்தியோகத்தர்களும் பெற்றோல் தட்டுப்பாடு உருவாகலாம் எனும் அச்சத்தில் நீண்டதூரம் கடமைக்கு செல்வது தொடர்பிலும் கவலை அடைந்துள்ளனர்.
இருந்தபோதிலும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தற்போதைய நிலைக்கு உருவாக வாய்ப்பில்லை என்பதும் அறியக்கூடியதாக அமைந்துள்ளது.
No comments