இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய லொத்தர் பரிசை வென்ற நபர்; 47கோடிக்கு மேல்!!
இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய லொத்தர் பரிசை ஒருவர் வென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் திணைக்களத்தின் மெகா பவர் லொட்டரியின் 2210 ஆம் இலக்க சீட்டிழுப்பில் கிடைத்த ரூ. 474,599,422 பெரும் பரிசு இதுவாகும்.
இந்த பெரும் லொத்தர் பரிசை கோகரெல்ல பகுதியைச் சேர்ந்த லொத்தர் முகவரான எச்.ஏ.ஜானகி ஹேமமாலாவால் விற்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கையில் மிகப் பெரிய லொத்தர் பரிசாக ரூ.230 மில்லியன் பரிசு வழங்கப்பட்டது, இதுவும் மெகா பவர் லாட்டரியில் இருந்துதான் கிடைத்துள்ளது.
லொத்தர் வெற்றியாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments