Column Left

Vettri

Breaking News

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவில் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் முதல் நிலையில்




கிழக்கு பல்கலைக்கழத்திற்கான 11 வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் நேற்று(29) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.
குறித்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தேர்தலில் 8 பேர் களமிறங்கினர். இவர்களுக்கான நேர்முக பரீட்சை நேற்று பல்கலைக்கழக பேரவையினால் நடாத்தப்பட்ட நிலையில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், இரண்டாவதாக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், மூன்றாவதாக பேராசிரியர் தற்போதைய சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிதி தில்லைநாதன் சதானந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டு அந்த பெயர்பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பியதையடுத்து ஜனாதிபதி மூவரில் ஒருவரை உபவேந்தராக தெரிவு செய்து அதற்கான நியமனத்தை வழங்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரைதீவு மக்கள் சார்பாக, வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே...

No comments