Column Left

Vettri

Breaking News

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!




 3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!



தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் (7) மூவாயிரம் நாட்களை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


இறுதிப்போரின்போதும் அதற்கு முன்னரும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மைநிலையினை அறியத்தருமாறு வலியுறுத்தி, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்துக்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.


இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூவாயிரம் நாட்களாகிவிட்ட நிலையில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வின்றி போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.


இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தங்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

No comments