Column Left

Vettri

Breaking News

75 வருட வரலாற்றில் மிகவும் பின்தங்கிய மல்லிகைத்தீவில் அபார கன்னிச் சாதனை! இரண்டு மாணவிகள் புலமைப் பரிசில் சித்தி!!!




 (வி.ரி. சகாதேவராஜா)


 சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவிகள் சித்தி அடைந்துள்ளார்கள்.

 மல்லிகைத்தீவு  அ.த.க.பாடசாலையின் அதிபர் எஸ்.ஜதீஸ்வரா இத்தகவலை நேற்று ஊர்ஜிதப்படுத்தினார். 

உருத்திரமூர்த்தி சபிக்ஷனா என்ற மாணவி 144 புள்ளிகளையும், ராஜு சஞ்ஷனா என்ற மாணவி 146 புள்ளிகளையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர் .

அதிபர் ஜதீஸ்வரா கருத்துத் தெரிவிக்கையில்..
 பாடசாலையின் 75 வருட கால வரலாற்றில் முதல் தடவையாக இந்த இரண்டு மாணவிகள் சித்தி அடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் . போக்குவரத்து வசதி ரியூசன் வசதி இல்லாத இப் பகுதியில் படைத்த இச் சாதனை எமக்கு பெருமையை தேடித் தந்துள்ளது. இவர்களை 
உருத்திரமூர்த்தி ஆசிரியர் கற்பித்தார்.

மாணவர்கள் பெற்றோர்கள் உதவிய ஏனைய ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.




No comments