Column Left

Vettri

Breaking News

இன்று கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம் கவிதை நூல் வெளியீட்டு விழா




( வி.ரி.சகாதேவராஜா) மலையக எழுத்தாளர் அதிபர் கந்தையா கணேசமூர்த்தியின் "சுக்கில பட்சம்' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (30) ஞாயிற்றுக்கிழமை புஸல்லாவ சரஸ்வதி இந்து மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி துரை மனோகரன் தலைமையில் இவ் விழா நடைபெற்றது. சின்மயா மிசன் கார்த்திக் சைதன்யா ஆன்மீக அதிதியாக கலந்து கொண்ட இவ் விழாவில் உதவிக் கல்விப் பணிப்பாளர் துரைசாமி நடராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். புஸல்லாவ சரஸ்வதி இந்து மகா வித்தியாலய அதிபர் த.கணேசன் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாஉள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பிரமுகர்கள் அதிதிகள் கலந்து சிறப்பித்தனர். நூலாசிரியர் க.கணேசமூர்த்தியின் இரண்டாவது நூல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us