வெற்றியின் கரங்கள் அமைப்பினால்கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி கௌரவிப்பு!!
இறைவனின் அருளைத் தேடி, யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிச் செல்லும் பாதயாத்திரிகர்களின் நீண்ட ஆன்மீகப் பயணத்திற்குப் பக்கபலமாக நிற்கும் வகையில், V9 Creations Private Limited-இன் 'வெற்றியின் கரங்கள்' அமைப்பு, ஒரு மாபெரும் சேவையை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, நேற்று, திங்கட்கிழமை, ஜூன் 29, 2026 அன்று, மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில் ஆலயத்தின் முன்றலில், பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள 130-க்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளும், நீர் போத்தல்களும் அன்பளிப்பாக வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.
'வெற்றியின் கரங்கள்' அமைப்பு, இதுபோன்ற சமூக சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றதுடன், எதிர்காலத்திலும் இப்படியான மக்கள் நலப் பணிகளை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.
No comments