கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் றஹ்பத் சரோஸ் 9 ஏ சித்தி பெற்று சாதனை!!
எம்.எஸ்.எம்.ஸாகிர்
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் ஜனூஸ் முஹம்மட் றஹ்பத் சரோஸ் வெளியாகியுள்ள க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மழ்ஹருஸ்ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 01 முதல் தரம் 09 வரை கற்று பின்னர் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இணைந்து அங்கு கற்ற வேளையிலே 9ஏ சித்திகளைப் பெற்று இச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
அமைதியான சுபாவமும் சிறந்த அறிவாற்றலை யும் உடைய இம்மாணவன் கவிஞரும் ஊடகவியலாளரும் வியூகம் ஊடக வலையமைப்பின் பணிப்பாளருமான எஸ். ஜனூஸின் மூத்த புதல்வராவார்.
No comments