Column Left

Vettri

Breaking News

மீண்டும் மருத்துவபீட பீடாதிபதியாக பேராசிரியர் சதானந்தன்!!




( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு பல்கலைக்கழக   சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக அந்தப் பீடத்தின் பீடாதிபதியாக காத்திரமான சேவையாற்றி வந்தார்.

அந்நிலையில் புதிய பீடாதிபதி தெரிவு செய்யும் தேர்தல் இடம்பெற்றது.

அதில்  பேராசிரியர் தில்லை நாதன் சதானந்தன் மீண்டும் தெரிவானார்.

 இவர் சமூகத்தில் சட்டத்தரணியாக சைவப் புலவராக பிரசித்த நொத்தாரிசாக மருத்துவக்கல்வி கலாநிதியாக பல்வேறு   வகிபாகங்களை வகித்து வருகிறார்.

No comments

Subscribe Us