Column Left

Vettri

Breaking News

உலகை அறிவோம் மாணவர்களுக்கான விவாத மேடை !




( வி.ரி. சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலகமானது கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் "உலகை அறிவோம் - விவாத மேடை" நிகழ்வானது இன்றைய தினம்(27.08.2025) புதன்கிழமை பிரதேச செயலாளர்  உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
   
பாடசாலை அதிபர் த
 சி. உருத்திரராஜா மற்றும் ஆசிரியர்களின்  ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த விவாத நிகழ்வில் "இலங்கையின்  கலாசாரம் ஏற்புடையது மற்றும் ஏற்புடையதல்ல  " எனும் தலைப்பில் மாணவர்கள் தங்கள் வாதங்களை மிகவும் சிறப்பான முறையில்  முன்வைத்திருந்தனர்.  இவ் விவாத நிகழ்வானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 5 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாத விளக்கு  வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெறும் இவ் விவாத நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், உதவி அதிபர் திருமதி சு. புவிச்சந்திரன், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுகளை பிரதேச செயலக  கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒழுங்கு செய்திருந்ததுடன், பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.







No comments