சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில் மாணவர்களைப் பாராட்டி ஊக்கமூட்டும் நிகழ்வு!!
நூருல் ஹுதா உமர்
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக கடந்த 13.07.2025 ஆம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட பீ- நிலையறி பரீட்சை யில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) இலிருந்து தோற்றி 150 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களைப் பாராட்டி மேலும் ஊக்கமூட்டும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் அவர்களும் கெளரவ அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் பாடசாலை EPSI ஒருங்கிணைப்பாளருமான எஸ்.எம்.எம். அன்ஸார் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான திருமதி குறைஷியா ராபி, றின்ஷா பர்வின் மற்றும் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் அவர்களும் கெளரவ அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் பாடசாலை EPSI ஒருங்கிணைப்பாளருமான எஸ்.எம்.எம். அன்ஸார் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான திருமதி குறைஷியா ராபி, றின்ஷா பர்வின் மற்றும் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments