Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பல்வேறு செயற்பாடுகள்- தவிசாளரின் துரித நடவடிக்கை!!




 வி.சுகிர்தகுமார் 

 திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக இருந்த மீன்சந்தையினை சந்தையின் உட்புறத்திற்கு மாற்றம் செய்து மக்களின் அசௌகரியத்தினை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையினை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சு.சசிகுமார் முன்னெடுத்துள்ளார்.
மேலும் விவசாயிகளின் நலன்கருதி அவர்களின் முறைப்பாட்டிற்கு அமைய குறிப்பிட்டளவு எரிபொருளினை கலன்களில் வழங்குவதற்கான அனுமதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதேநேரம் பெருந்தொல்லையாக இருந்த கால்நடைகள் வீதிகளில் நடமாடுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு பிரதேச சபைக்குட்பட்ட உள்ளக வீதிகள் அனைத்தும் செப்பனிடும் பணிகளும் தம்பட்டை தொடக்கம் தாண்டியடி வரைக்குமான அனைத்து வீதிகளுக்குமான வீதி விளக்குகளை பொருத்தும் செயற்பாடும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆலயங்களின் உற்சவங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயங்களுக்கு தேவையான சுகாதாரப்பணிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளும் ஆலய வளாகங்கள் சீரமைக்கும் பணிகளும் இடம்பெற்றுவருகின்றன.
மேலும் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் லாகுகல பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு அமைய பிரதேச சபைக்கு சொந்தமான 15 ஆயிரம் லீற்றர் தண்ணீர் வவுசர் உகந்தை மலை முருகன் ஆலயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன் தங்கவேலாயுபுரம் போன்ற வரட்சியான பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் குடிநீர் வழங்கும் நடவடிக்கையும் தடைகளின்றி தொடரப்பட்டுள்ளதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

No comments