சகோதரத்துவமும் அன்பு குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட ஹஜ்ஜு பெருநாள் நல் வாழ்த்துக்கள்-எம்.ஆர்.எம்.மர்ஷாத்
பாறுக் ஷிஹான்-
“புனித ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் என் அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் உளமார்ந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்”என அரசியல் செயற்பாட்டாளர் மர்ஷாத் வெளியிட்டுள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வெளிநாடுகளிலும் தாய்நாட்டிலும் ஈதுல் அழ்ஹா ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் என் அன்பின் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் மழை பொழிய வேண்டும், அவர்களது வாழ்க்கை வளம்பெற வேண்டும், இறை கருணையில் அவர்கள் நிழல்பெற வேண்டும் என்று ஏக இறையோன் அருளாளனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன்.
எனவே எமது மார்க்கம் சமாதானத்துக்கானது என்ற தூதையும் நாங்கள் தேசத்தின் நல்லாட்சிக்கான பங்காளர்கள் என்ற செய்தியையும் சகோதர சமூகங்களுக்கு சிறப்பாக சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். அதற்கு முன் நாமே இந்த பேருண்மையை புரிய வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.
இப்ராஹீம் (அலை) அவர்களது வாழ்வியல் வரலாற்றின் உன்னத பாடத்தை புகட்டும் இப்புனித பெருநாளில், நாம் அனைவரும் திட சங்கற்பம் கொள்ள வேண்டும்.
எனவே நாம் அனைவரும் எம் தாய்த்திருநாட்டை பீடித்துள்ள ஊழல், இனவாதம், வறுமை, போதைப்பரவல், அடக்குமுறை, அந்நிய ஆதிக்கம், வேலையின்மை போன்றவற்றுக்கு எதிராக பாடுபட இப்புனித நாளில் உறுதி கொள்வோம். முஸ்லிம்களது மட்டுமன்றி முழு நாட்டினரதும் உரிமைகள் பாதுகாக்கப் படவும் , ஜனநாயக விழும்பியங்கள் இராணுவ சர்வாதிகாரத்துக்குள் காவுகொள்ளப்படாதிருக்கவும் விழிப்போடு செயற்படுவோம். இப்புனித நன்னாளில் எம் நாடு வளமாகவும் அனைவருக்கும் சுபீட்ஷமான நல்வாழ்வு கிட்டவும் இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் இது போன்ற நன்னாளை நற்சுகத்தோடும் சுபீட்ஷத்தோடும் நல்லருளோடும் மீண்டும் மீண்டும் வந்தடையச் செய்வானாக.
எம்மையும் உங்களையும் அவன் பொருந்திக் கொள்வானாக.ஈத் முபாரக் - இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள். என்று கேட்டுக் கொண்டார்.
No comments