Column Left

Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும் நாட்டின் மீதும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்குஇ வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய நேரங'களில்  தற்காலிக பலத்த காற்றும் வீசக்கூடும்

எனவே பொதுமக்கள் பலத்த காற்று  மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


No comments