Column Left

Vettri

Breaking News

மது போதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது




 மது போதையில் பஸ்ஸை செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் ஹல்தும்முல்ல பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹல்தும்முல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பதுளை - ஹல்தும்முல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த பஸ் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பஸ்ஸில் உள்ள பயணிகளின் பயணத்தை கருத்தில் கொண்டு வேறொரு சாரதி மூலம் பஸ்ஸை செலுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்தும்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments