Column Left

Vettri

Breaking News

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை- சந்தேக நபரை தேடும் பொலிஸார்




 பாறுக் ஷிஹான்

 
ஆற்றோரத்தில் நீண்ட காலமாக   இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  மல்வத்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை (17) கசிப்பு உற்பத்தி தொடர்பில்  ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு  கிடைக்கப்பெற்ற   தகவலின் அடிப்படையில்  இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது கசிப்பு உற்பத்திற்கான  200 லீற்றர், 2 இரும்பு பரள்,  செப்பு குழாய் ,1 கேஸ் அடுப்பு  ,  4 அடி நீளமுடைய ரப்பர் குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் இக்கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த   சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த சந்தேக நபரை   கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன் சான்றுப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை  நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில்   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிநடத்தில்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி  தலைமையிலான அணி  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments