Column Left

Vettri

Breaking News

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு -இரு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் கைது!!




பாறுக் ஷிஹான்

மணல் விற்பனை செய்யும் நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு பொலிஸார் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

 D.C.D.B என அழைக்கப்படும்   அம்பாறை மாவட்ட  குற்றப்புலனாய்வு  பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள்  தன்னிடம் ரூபா 25 000 இலஞ்சம்   கோருவதாக அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவில்  மணல் விற்பனை மற்றும் போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபடும்  ஒருவர்  கொழும்பிலுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான  சனிக்கிழமை(21)   அம்பாறை மணிக்கூட்டு கோபுரம் அருகில்  D.C.D.B என அழைக்கப்படும்    அம்பாறை மாவட்ட  குற்றப்புலனாய்வு  பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் கூறியமைக்கு அமைவாக   இலஞ்சப் பணத்தை   மணல் விற்பனை செய்யும் நபர் வழங்கியுள்ளார்.

இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அம்பாறை மாவட்ட  குற்றப்புலனாய்வு  பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகளை  கைது செய்தனர்.

மேலும் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவில்  மணல் விற்பனை மற்றும் போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபடும் நபரிடம் இருந்து மணல் போக்குவரத்து தொழிலை எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடரவும்  அந்த தொழில் தொடர்பாக சட்டப்பூர்வமாக செயல்படுவதைத் தவிர்க்கவும்  சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் அந்த நபரிடமிருந்து ரூபா 25000 இலஞ்சம் கோரியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
 
 
பின்னர் சம்மாந்தறை பொலிஸ் நிலையத்திற்கு இரு  சந்தெக நபர்களும் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர்  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

No comments