வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்தோர் நாடு திரும்புவதை வரவேற்கிறோம்!!
தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்று நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபரின் விடுதலை குறித்து ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சரின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில் (31) நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையை விட்டு வெளியேறி அகதி அந்தஸ்துடன் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த நிலையில், அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த ஒருவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினர் கைது செய்தனர்.இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல கோணங்களில் பேசப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு அகதி அந்தஸ்து கோரும் எம் நாட்டவர்கள். மீண்டும் நாடு திரும்புவதை நாம் வரவேற்கின்றோம்.குறித்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு தாம் கலந்துரையாடி வருகிறோம். இதற்குத் தேவையான சட்டமூலங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். வெகு விரைவில் அதுதொடர்பிலான அறிவித்தல்கள் வெளியிடப்படும்.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபரது விடுதலை தொடர்பிலும் ஆராயப்படுகிறது. இதற்கான பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றார்.
No comments