Column Left

Vettri

Breaking News

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்! கண்ணைப் பறிக்கும் நவதள இராஜகோபுரம்!




( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு – புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெரும் சாந்தி விழா எதிர்வரும் 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இங்கே நிருமாணிக்கப்பட்டுள்ள நவதள இராஜகோபுரம் கண்ணைப் பறிக்கும் வகையில் மிகவும் அழகாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இங்கே தான் நவதள இராஜகோபுரம் முதல் தடவையாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மகா கும்பாபிஷேகத்திற்கான கர்மாரம்பம் நாளை மறுநாள் 04.06.2025 (புதன்கிழமை) ஆரம்பமாகும். பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு- 06.06.2025 07.06.2025 ஆம் திகதிகளில் நடைபெறும். மகா கும்பாபிஷேகம் - 08.06.2025 ஆம் தேதியன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஆயிரக்கணக்கான அடியார்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் சென்று பூப்போட்டு உணர்வு பூர்வமாக வழிபட்டு வருகின்றனர் என்பது அம்மனின் சக்திக்கு அத்தாட்சியாகும். மகா கும்பாபிஷேகமன்று லட்சம் அடியார்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments