Column Left

Vettri

Breaking News

மண்முனை தென்மேற்கு கொக்கட்டிச்சோலை பிரதேச சபை சுயேட்சை வசம்! திரேசகுமாரன் தவிசாளரானார்!




 ( வி.ரி. சகாதேவராஜா)


மண்முனை தென்மேற்கு கொக்கட்டிச்சோலை பிரதேசசபையில் பந்து சின்ன சுயேட்சைக் குழுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளன.

மண்முனை தென்மேற்கு  பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏஎல்எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது .

அங்கு தவிசாளர் தெரிவில் இருவர் போட்டியிட்டார்கள். சுயேச்சை பந்து அணியில் இளைய தம்பி திரேசகுமாரன்,  இலங்கை தமிழரசுகட்சி சார்பில் கோபால பிள்ளை சுரேந்திரன் ஆகியோர் போட்டியிட்டார்கள் .

அதன் பொழுது 9 வாக்குகளைப் பெற்ற சுயேட்சை அணி சார்பில் போட்டியிட்ட திரேசகுமாரன் தவிசாளராக தெரிவானார். மற்றவருக்கு ஆறு வாக்குகள் கிடைக்கப்பெற்றது.

 உதவித்தவிசாளராக கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு படகு கட்சியின் உறுப்பினர் கனகநாயகம் கபில்ராஜ் ஏகமனதாக தெரிவானார்.

 மொத்தத்தில் அங்கு சுயேட்சை அணியும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு படகு அணியும் சேர்ந்து ஆட்சி அமைத்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தி நடுநிலைமையாக இருந்தது.
கடந்த தடவை ஆட்சியில் இருந்த இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை தோல்வியை தழுவியது




No comments

Subscribe Us