2025 ஆண்டுக்கான கதிர்காம யாத்திரையர்களூக்கான குடிநீர் சேவையினை ஆரம்பித்தது சிவதொண்டர் அமைப்பு அம்பாறை மாவட்டம் ..
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்...
இலங்கையின் தேசத்து திருத்தலங்களின் ஒன்றான மொனராகலை மாவட்டத்தின் கதிர்காம எனும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்தின் உற்சவத்தின் புனித பாதயாத்திரைக்கான குடிநீர் சேவையினை அம்பாறை மாவட்ட தம்பிலுவில் சிவதொண்டர் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது
அம்பாறை மாவட்ட சிவதொண்டர் அமைப்பானது 1996 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2004 ஆண்டு சிவதொண்டர் அமைப்பாக உருவெடுத்து.... கதிர்காம யாத்திரையர்களுக்கு
குடிநீர் மற்றும் மருத்துவ சேவையினை வழங்கி வருகின்றது....
தம்பிலுவில் சிவதொண்டர் அமைப்பினால் 29ம் ஆண்டாக கதிர்காம பாதயாத்திரைக்கு குடிநீர் சேவை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது....
அதற்கமைவாக இவ் வருடமும் கதிர்காம புனித யாத்திரையர்களுக்கான குடிநீர் சேவையினை முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட ஒன்று கூடல் நிகழ்வும் அவர்களுக்கு சீருடை மற்றும் தொப்பி வழங்கும் நிகழ்வானது அம்பாறை சிவதொண்டர் அமைப்பு தம்பிலுவில் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது....
இன் நிகழ்வில் அமைப்பினருக்கு சிருடைகள் மற்றும் தொப்பி வழங்கிய மற்றும் தண்ணீர் தாங்கிகள் வழங்கிய அனுசரனையாளர்களும் கலந்து கொண்டனர்
மேலும் இவ் நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் திருக்கோவில் பிரதேச இந்து கலாச்சார உத்தியோத்தர்கள் சமய தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.....
மேலும் சிவதொண்டர் அமைப்பின் உறுப்பினர் மற்றும் கலாசார உத்தியோத்தர் மற்றும் சமய தலைவர்களினால் சேவைகள் பற்றி உரையும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments