இன்று காரைதீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!
( வி.ரி. சகாதேவராஜா)
முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு
வழமைபோல் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இன்று (14) புதன்கிழமை காரைதீவு பொதுச் சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
முன்னதாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன . பலரும் உரையாற்றினர்.
நிறைவாக அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பொலிசாரும் படம் பிடித்தனர்.
No comments