நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினருமான தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இன்று (14.05.2025) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.நாவிதன்வெளி பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர், நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி, சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments