Vettri

Breaking News

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!




 மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!


கொழும்பு- கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த மாணவி, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக, இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்த போராட்டம் கொட்டாஞ்சேனை  ராஜேஸ்வரி கல்விக்கூடம் வரை முன்னெடுக்கப்படுகின்றது.


கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விக் கற்றுவந்த மாணவி ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


மாணவி கல்வி கற்றுவந்த பாடசாலையில் கற்பித்த கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளதாக பொற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கணிதபாட ஆசிரியரைப் பாதுகாத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதனை தொடர்ந்து மாணவிக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அவமானம் காரணமாக மாணவி விரக்தியடைந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.


முன்னதாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தபோது  சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்று பின்னர் விடுதலையானார்.


இதனை தொடர்ந்து மாணவியை கொழும்பில் உள்ள வேறு ஒரு பிரபல மகளிர் பாடசாலைக்கு பெற்றோர் மாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் மாணவி பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் கற்கை நிலையத்தில் ஆசிரியராக இருந்தவரும், மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியரின் நண்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனது நண்பரான கணதபாட ஆசிரியருக்கு எதிராக மாணவி வழக்கிய முறைபாடு தொடர்பாகவும் மாணவியின் நடத்தை தொடர்பாகவும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் தவறான தகவலை திட்டமிட்டு பொது வெளியில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.


இதனால் மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் குறித்த மாணவி தாம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.


குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பும் பாடசாலை நிர்வாகவே ஏற்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்னர். உடனடியாக பொலிஸார் மாணவியின் தற்கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோருகின்றனர்.


இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்லர்கள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments