Column Left

Vettri

Breaking News

கோட்டைக்கல்லாறு பொதுமயானத்தில் சிரமதானம்




 செ.துஜியந்தன்


 கோட்டைக்கல்லாறு பொதுமயானம் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானம் செய்யப்பட்டது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தருமரெத்தினம் சுதாகரன்  தலைமையில் நடைபெற்ற இச் சிரமதானத்தில் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டைக்கல்லாறு பொதுமயானத்தின் உள்ளும் வெளியும் துப்பரவு செய்யப்பட்டது. களுதாவளை பிரதேச சபையின் கழிவகற்றும் வாகனம் மற்றும் ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


No comments