Column Left

Vettri

Breaking News

பெண்ணே விழித்திடு நூல் வெளியீட்டு விழா




 (செ.துஜியந்தன் )


கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், கவிதாயினி ஜெனிதா மோகனின் பெண்ணே விழித்திடு எனும் கட்டுரை தொகுப்பு  நூல் வெளியீட்டு விழா இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் அண்மையில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் , மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் ச.நவநீதன் ஆகியோர் உட்பட  எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந் நூலில் பெண்களே மிகவும் உசாராக இருங்கள், சிறுவர் துஸ்பிரயோகம், அன்னை தெரேசா, குற்றம் என்றால் என்ன, பெண்களின் சட்ட உரிமைகள், மங்கையர்க்கு மகுடம் சூட்டும் மகளிர் தினம், வன்முறையற்ற அணுகுமுறை, சிறுவர் பெண்களைப் பாதுகாத்தல், பால் நிலை சமத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தலைமைத்துவம், புனிதமான உறவை குழிதோண்டி புதைக்க வேண்டாம்,  மலர்கள் போன்ற பெண்களை கசக்கி எறியாதீர்கள், தகாப்புணர்ச்சி சமூகச் சீரழிவின் வெளிப்பாடு, நிஜ சம்பவம், தன்னம்பிக்கை, ஆணாதிக்கமும் சீரழியும் சிறுவர்களின் எதிர்காலமும், பொருளாதார நெருக்கடியும், அதன் தாக்கங்களும், இளவயது திருமணம் ஒரு சமூகவியல் பார்வை ஆகிய தலைப்புகளில் 
சமூகப்பிரச்சினைகள், குடும்பம் சார் பிரச்சினைகள், தனிமனித முரண்கள், என பலதரப்பட்ட தலைப்புகளில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது.

இங்கு நூல் வெளியீட்டு உரையினை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதிப்பதிவாளர் சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்தினார். சிறப்புரையினை எழுத்தாளர் உமா வரதராஜன் உட்பட  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் நவநீதன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் ஆகியோர் வழங்கியதுடன் ஏற்புரையினை நூலாசிரியர் ஜெனிதா மோகன் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.







No comments