Column Left

Vettri

Breaking News

தற்காலிக பாலம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ; களத்தில் தாஹிர் எம்.பி..!




(எஸ். சினீஸ் கான்)


ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள பாலம் வெள்ள நீரினால் பாதிப்புக்குள்ளாகி உடைந்த சம்பவமொன்று நேற்று நள்ளிரவு இடம்பெற்றிருந்தது.

குறித்த வீதியின் பொதுப்போக்குவரத்து தடைப்பட்டிருப்பதனால் மாற்றீடாக தற்காலிக பாலம் அமைப்பது தொடர்பாகவும், அத்தியாவசிய பணியாளர்கள் பயணிப்பதற்காக தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை துரிதப்படுத்துமாறு வேண்டிக் கொண்டார்.

நேற்று கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய சீரற்ற வாநிலையினால் அதிகம் பாதிப்புற்ற இடங்களுக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக உரிய அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.

No comments