Column Left

Vettri

Breaking News

(அஸஅம்பாறையில் பெரும் மழை விவசாயிகள் மகிழ்ச்சி. பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கான உழவு வேலைகள் ஆரம்பம்!!




 அஸ்ஹர்  இப்றாஹிம்)


அம்பாறை  மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பரவலான மழை பெய்துள்ளது.இதனால் விவசாயிகள் பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கான உழும் நடவடடிக்காளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குளிரான நிலமையும், காலநிலை மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.

அம்பாறை மாவட்டதின் சம்மாந்துறை,நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று விவசாய விஸ்தரிப்பு நிலையங்கள் மழை பெய்ய ஆரம்பித்ததும் பெரும் போக விதைப்பு வேலைகளை ஆரம்பிக்குமாறு விவசாயிகளை கேட்டிருந்தது.

ஒவ்வொரு போகத்தின் போதும் உர மானியமாக ஹேக்டேயருக்கு 15,000ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் பணிப்புரைக்கமைய பெரும்போகத்திலிருந்து ஹெக்டேயருக்கு 25,000 ரூபாய் வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்திருப்பது விவசாயிகளுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments