Column Left

Vettri

Breaking News

மேலாடையின்றி தோசை சுட்டு கொண்டு இருந்த நபர் கைது!!




 மேலாடையின்றி தோசை சுட்டு கொண்டு இருந்ததாகக் கூறி கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவுகமொன்றுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகரால்  புதன்கிழமை (21) அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் 02 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் 06 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர் ஏ. எல். எம். சந்திரசேன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

No comments

Subscribe Us