Column Left

Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் .

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொணராகலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, செயற்பாட்டில் உள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்று காரணமாக, அரபிக் கடல் பகுதியில் (10N – 20N), (55E – 72E) மற்றும் வங்காள விரிகுடா (13N – 21N), (84E – 92E) வரையிலான கடல் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 70-80 கி.மீ. வேகத்தில் மிக பலமான காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலை காணப்படும்.

No comments