Vettri

Breaking News

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீர் மின்சார உற்பத்தி




 நீர் மின் உற்பத்தி 20 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிதளவு மழை பெய்து வருவதால் நீர்மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மழையின் அளவைப் பொறுத்து நாளுக்கு நாள் நீர் மின்சார உற்பத்தி சதவீதம் மாறுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைக்க வேண்டிய நிலை

நீர்த்தேக்கங்களில் இதுவரை குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை என தெரிவித்த செனவிரத்ன,  கடந்த வாரம் 14 வீதமாக காணப்பட்ட நீர்மின் உற்பத்தியை உயர்த்துவது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டிய பணி எனவும் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீர் மின்சார உற்பத்தி | Increase In Hydropower Generation 

எதிர்வரும் நாட்களில் மழை பெய்யாவிடின் உற்பத்தியை மீண்டும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என மேலும் அவர் கூறியுள்ளார்

No comments