Column Left

Vettri

Breaking News

இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கிரிக்கெட் அணி!




இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.ஆசிய கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டியின் சில போட்டிகளில் பங்கேற்பதற்காகவே அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இந்நிலையில் இவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.செப்டம்பர் 2 இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கிரிக்கெட் அணி
அவர்கள் இன்று மதியம் 12.45 மணியளவில் இந்தியாவின் பெங்களூரில் இருந்து விசேட ஜெட் விமான சேவைக்கு சொந்தமான SG-9045 என்ற விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அத்துடன் அவர்கள் பங்கேற்கும் முதல் போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 2 ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

No comments