காரைதீவு கல்விக் கோட்டத்தில் 168 புள்ளிகளைப் பெற்று உதயகுமார் மோகாத்மிகா முதலிடம்!!
காரைதீவு கல்விக் கோட்டத்தில் 168 புள்ளிகளைப் பெற்று உதயகுமார் மோகாத்மிகா முதலிடம்!!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையிற்கு காரைதீவு கல்விக் கோட்டத்தில் தோற்றிய மாணவர்களில், கமு/கமு/இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் உதயகுமார் மோகாத்மிகா எனும் மாணவி 168 புள்ளிகளைப் பெற்று காரைதீவு கல்விக் கோட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தனது கடின உழைப்பாலும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதலால் இச்சாதனையை ஈட்டியுள்ள இந்த மாணவியின் வெற்றி, பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இம்மாணவிக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments