பக்திபூர்வமாக நடைபெற்ற நெல்குற்றுதல் சடங்கு
பக்திபூர்வமாக நடைபெற்ற நெல்குற்றுதல் சடங்கு
( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கின் இறுதிநாளான நேற்று (1) திங்கட்கிழமை மாலை நெல்குற்றுதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
மூன்று கல் உரல்களில் பூஜை சகிதம் இட்ட நெல்லை
ஆலய தர்மகர்த்தாக்கள் கப்புகன்மார் கங்காணிமார் பரிபாலன சபையினர் மற்றும் பெண் பக்தர்கள் உலக்கை கொண்டு குற்றினார்கள்.
ஒரு உரலுக்கு இரண்டு உலக்கைகள் பாவித்து அரோகரா மற்றும் குரவை சத்தம் சகிதம் குற்றப் பட்டது.
குற்றிய அரிசு அம்மனுக்கு பொங்கல் படைக்க பயன் படுத்தப் பட்டது.
No comments