கல்முனை தாருல் அர்கம் மாலை நேரப் பாடசாலை மாணவர்களின் பட்டமளிப்பு விழா!
கல்முனை தாருல் அர்கம் மாலை நேரப் பாடசாலை மாணவர்களின் பட்டமளிப்பு விழா!
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
கல்முனையில் இயங்கி வரும் கல்முனை தாருல் அர்கம் மாலை நேரப் பாடசாலை மாணவர்களின் பட்டமளிப்பு விழா இன்று (15) மத்ரஸா வளாகத்தில் ஆன்மிக மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த சூழலில் சிறப்பாக நடைபெற்றது.
கல்வி மற்றும் ஒழுக்கப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் மெளலவி M.I.M. ரபீக் அல் ஆலிம் (BA) அவர்களின் வழிகாட்டலில் இக் கல்வி நிலையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் S.L. அமீர் பாறுக் அவர்களின் தலைமையிலும் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு விழாவை மேன்மைப்படுத்தினார். கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வராகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும், ரஹ்மத் பவுண்டேசன் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவராகவும் பணியாற்றி வரும் அவர் தனது உரையில், “கல்வி என்பது மனிதனை உயர்த்தும் ஒளிவிளக்காகும்; மார்க்கக் கல்வி மனித வாழ்வை செம்மைப்படுத்தும் வலுவான அடித்தளமாகும்” என வலியுறுத்தினார்.
நிகழ்வின் போது மாணவர்களின் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. அவர்களின் திறமைகள், ஒழுக்கம் மற்றும் பயிற்சி அங்கு கலந்து கொண்டிருந்தோரின் பாராட்டைப் பெற்றது. கல்விப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், சிறப்பு அதிதிகளுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் உலமாக்கள், பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களின் சாதனைகளை பாராட்டினர். பெற்றோர்களின் மகிழ்ச்சியும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் நிகழ்வின் சிறப்பை மேலும் உயர்த்தியது.
அறிவும் ஒழுக்கமும் இணைந்த தலைமுறையை உருவாக்கும் உயர்ந்த இலட்சியத்துடன் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழா, மத்ரஸாவின் கல்விச் சாதனைகளில் மேலும் ஒரு பொற்குறியாக பதியப்பட்டுள்ளது.
No comments