கடலரிப்பு குறித்து ஆராய்ந்தார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்
கடலரிப்பு குறித்து ஆராய்ந்தார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்
பாறுக் ஷிஹான்
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து கண்டறியும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (14) நேரில் சென்றிருந்தார்.
அட்டப்பள்ளம் பிரதேசத்தின் கடலோர பகுதி மிக வேகமாக கடலினால் காவுகொள்ளப்பட்டு வருவதனால் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தீவிரிப்படுத்தப்பட்டு வருவதாகவும், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியாளரின் வழிகாட்டுதலின் கீழ், அவசரமாக கடலரிப்பை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.
No comments