Column Left

Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 வங்காள விரிகுடாவில், இலங்கைக்கு தென்கிழக்கே நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக (Low-Pressure Area) வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 8ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

  • ஊவா மாகாணம் மற்றும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

  • நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

  • மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்…

  • இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments