காரைதீவில் கடலரிப்பு அதிகரிப்பு ! மீனவர்களின் உடமைகள் சேதம் !!!
(வி.ரி.சகாதேவராஜா)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் காரைதீவு கடற்கரையில் கடலரிப்பின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது.
இதன் காரணமாக மீனவர்களின் உடமைகள் சேதமடைந்துள்ளதுடன் தென்னை மரங்கள் பலவும் காவுகொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை தாழ் நிலப் பகுதியில் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது.
மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
No comments