Column Left

Vettri

Breaking News

இரு வீடுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் திறந்து வைக்கப்பட்டன




 வி.சுகிர்தகுமார்          


 மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சினால் ஊடாக நிர்மானிக்கப்பட்ட இரு வீடுகளும் இன்று (28)ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் திறந்து வைக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வருமானம் குறைந்த கோளாவில் 3 இல் ஒரு வீடும் கோளாவில் -02 கிராமத்தில் ஒரு வீடும் திறந்து வைக்கப்பட்;டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் {ஹசைன்டீன் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் கே.நேசராஜா உள்ளிட்ட பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் என பலர் கலந்து கொண்டனர்.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் வீடமைப்பினை முன்னெடுத்துவரும் அரசுக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.



No comments