மூன்று இலட்சம் லஞ்சம் பெற்ற கம்பஹா குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது!!
சட்டவிரோத பொருட்களை வைத்திருந்த நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், கம்பஹா காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (OIC) லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் மூன்று இலட்சம் (3,00,000) ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
No comments