"நாடு மீண்டும் பொருளாதார ரீதியான திவால்நிலைக்கு செல்லாது" - ஜனாதிபதி!!!
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக முன்வைக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டினால், 2026 ஏப்ரல் அளவில் நாடு மீண்டும் பொருளாதார ரீதியான திவால்நிலைக்கு வழிவகுக்கும் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
அண்மைய வரலாற்றில் நாங்கள் முன்வைத்த பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, 05 ஆம் திகதி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஆவணத்தை இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். ஆனால் மிகக் குறுகிய காலத்தில், மீண்டும் 500 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
No comments